நடிகர் அஜித் குமார் கார் பந்தயத்தில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த மாதம் துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் அவரது அணி பங்கேற்றது. ஆனால், போட்டிக்கு முந்தைய பயிற்சியின் போது, அஜித் குமார் ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானது.
இதையடுத்து அவர் போட்டியில் இருந்து விலகினார். அவர் இல்லாத நிலையிலும் அவரது அணி மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
தற்போது ஸ்பெயினில் நடைபெற்று வரும் கார் பந்தயத்தில் அஜித் குமார் பங்கேற்றுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு வலென்சியாவில் நடந்த பந்தயத்தில், அவர் மற்றொரு காரை முந்த முயன்றபோது விபத்துக்குள்ளானார்.
அதிர்ஷ்டவசமாக, அவர் காயமின்றி தப்பினார். இந்த நிலையில், அஜித்தின் காரில் இருந்த கேமராவில் பதிவான விபத்து காட்சியை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
அஜித் எந்தவித காயமும் இன்றி வெளியே வந்ததாகவும், தொடர்ந்து பந்தயத்தில் பங்கேற்பார் என்றும் கூறி அவரது விடாமுயற்சியை பாராட்டினார்.