அசோக் செல்வன் – கீர்த்தி சுரேஷ் கூட்டணியில் புதிய படம்: மில்லியன் டாலர் நிறுவனம் அறிவிப்பு!
‘ஒன்ஸ் மோர்’ மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய படங்களைத் தயாரித்துள்ள மில்லியன் டாலர் நிறுவனம், அடுத்ததாக ஒரு புதிய படத்தைத் தயாரிக்கவுள்ளது. இந்த இரண்டு படங்களின் வெளியீட்டுத் தேதியும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்தப் புதிய படத்தில் அசோக் செல்வனும் கீர்த்தி சுரேஷும் ஜோடி சேர்ந்து நடிக்கின்றனர். படத்தை ஒரு புதுமுக இயக்குநர் இயக்குகிறார். ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களைத் தேர்வு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்து, இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளது படக்குழு. படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.